shrimp-vadai-recipe-(மொறுமொறுப்பான... இறால் வடை) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

shrimp-vadai-recipe-(மொறுமொறுப்பான... இறால் வடை)

பன்னீர் தேங்காய் கிரேவி

மொறுமொறுப்பான... இறால் வடை


விடுமுறை நாட்களில் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? குறிப்பாக உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இறால் வடையை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, இறால் வடை செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.


உங்களுக்கு இறால் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* இறால் - 1/4 கிலோ

 துருவிய தேங்காய் - 1/4 கப்

* சின்ன வெங்காயம் - 6

* இஞ்சி - 1/2 இன்ச்

* பூண்டு - 5 பல்

* பச்சை மிளகாய் - 2

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

பிற பொருட்கள்:

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* சோம்பு - 1 டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்

* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பின் சுத்தம் செய்த இறாலை பிளெண்டரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பின்பு அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இறால் வடை தயார்.


குறிப்பு:

* தேங்காய் எண்ணெயில் பொரித்தால், வடை இன்னும் சூப்பராக இருக்கும்.

* வடையை பொரிக்கும் போது, எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்த்துக் கொண்டால், நல்ல ஃப்ளேவர் கிடைக்கும்.

No comments:

Post a Comment