பள்ளிப்பாளையம் காளான் ப்ரை
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும்,
இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், சுவையான
No comments:
Post a Comment