
Ghee field (நெய் புலவு )
தேவையானவை பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, உப்பு -
தேவையான அளவு, புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, தாளிக்க: நெய் - 4
டேபின்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 1. அரைக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் நலர் 2 (தனியாக அரைக்க வேண்டும்). இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல் (தனியாக அரைக்க வேண்டும்) செய்முறை பாசுமதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள் பெரிய வெங்காயம், புதினா, மல்லித்தழையை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள், பச்சை மிளகாயைக்
கீறிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், நெய்யைக் காயவைத்து, பிரிஞ்சி இலை சேர்த்து அரைத்த பட்டை-லவங்க விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுகளை சேர்த்துக் கிளறுங்கள்.
வதங்கியதும் வெங்காயம், சிட்டிகை உப்பு, புதினா, மல்லித்தழை சேர்த்து வதக்குங்கள். பிறகு,
வடித்த சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இந்த 'நெய் புலவுக்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடியை விட, குருமா மிகவும் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment